Friday, August 31, 2018

புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி

மூவேந்தர்களும் ஒற்றுமையின்மையினாலும் தாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தது வரலாறு. மூவேந்தர் பற்றிய சங்கப்பாடல்கள் ஏராளம். ஆனால் மூவரையும் இணைத்துப் பாடிய பாடல் (மூவரும் சேர்ந்து இடம்பெற்ற பாடல்) ஒட்டுமொத்த சங்க இலக்கியத்திலேயே ஒன்றே ஒன்று தான்.

சோழன் ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி நடத்திய வேள்வியில் பங்கேற்க சேரமான் மாரிவெண்கோ மற்றும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி இருவரும் வந்திருந்த போது நமது ஔவை பெருமாட்டி பாடிய அந்தச் சிறப்புமிக்க பாடல் இதோ: 



நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

பாடியவர்: ஔவையார். 
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது. 

திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 


புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி  
http://thooralgal.sigaram.info/2018/08/Puranaanooru-Moovendhar-Poem.html  
#சங்ககாலம் #இலக்கியம் #தமிழ் #மொழி #மூவேந்தர் #புலவர் #கவிதை #ஔவையார் #சேரன் #சோழன் #பாண்டியன் #மரபுக்கவிதை #சிகரம்